• May 17 2024

திருமலையில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் கைது!

Sharmi / Jan 2nd 2023, 12:41 pm
image

Advertisement

திருகோணமலை - தோப்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்லைக்குளம் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரமொன்றையும் 22 வயதான சாரதியையும் பொலிஸார் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக தோப்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் கைது செய்ததாக குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட உழவு இயந்திர சாரதியை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை தோப்பூர் பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர். 

திருமலையில் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இளைஞன் கைது திருகோணமலை - தோப்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உல்லைக்குளம் காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி  சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரமொன்றையும் 22 வயதான சாரதியையும் பொலிஸார் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக தோப்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் கைது செய்ததாக குறிப்பிட்டனர்.கைது செய்யப்பட்ட உழவு இயந்திர சாரதியை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை தோப்பூர் பொலிஸார்  முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement