அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த சில நாட்களாக தரித்து வைக்கப்பட்ட சைக்கிள்கள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.
இதனையடுத்து விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ் குழு இவ்வாறு காணாமல் போன சைக்கிள்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் திருடப்பட்ட சைக்கிள்களை கொள்வனவு செய்தவர்களையும் ஞாயிற்றுக்கிழமை(14) மாலை கைது செய்துள்ளனர்.
இதன் போது கைதான 24 வயதான சந்தேக நபர் உட்பட திருடப்பட்ட சைக்கிள்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது samugammedia அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த சில நாட்களாக தரித்து வைக்கப்பட்ட சைக்கிள்கள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன.இதனையடுத்து விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ் குழு இவ்வாறு காணாமல் போன சைக்கிள்களை மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் திருடப்பட்ட சைக்கிள்களை கொள்வனவு செய்தவர்களையும் ஞாயிற்றுக்கிழமை(14) மாலை கைது செய்துள்ளனர்.இதன் போது கைதான 24 வயதான சந்தேக நபர் உட்பட திருடப்பட்ட சைக்கிள்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.