வவுனியா- காத்தார்சின்னகுளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சேர்ந்த என்ற 23 வயதுடைய அயந்தன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞரின் பெற்றோர் வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியுள்ள நிலையில் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.