ஆன்மீக சுற்றுலா சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்தில் இருந்த சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்தில் இந்த தீ பரவல் இன்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உத்திர பிரதேசத்தில் இருந்து கடந்த 17 ஆம் திகதி தமிழகத்திற்கு வருகைத்தந்த யாத்திரகர்கள் பயணித்த தொடருந்தே தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தொடருந்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 60ற்கும் அதிகமானோர் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் இந்திய ரூபா வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக சுற்றுலா சென்ற தொடருந்தில் தீப்பரவல் - 10 பேர் உயிரிழப்பு- 20 பேர் காயம் samugammedia ஆன்மீக சுற்றுலா சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தொடருந்தில் இருந்த சமையல் எரிவாயு கொள்கலன் வெடித்தில் இந்த தீ பரவல் இன்று அதிகாலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.உத்திர பிரதேசத்தில் இருந்து கடந்த 17 ஆம் திகதி தமிழகத்திற்கு வருகைத்தந்த யாத்திரகர்கள் பயணித்த தொடருந்தே தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த தொடருந்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 60ற்கும் அதிகமானோர் பயணித்தாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் இந்திய ரூபா வழங்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.