• Sep 21 2024

14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல்..! தமிழர் பகுதியில் கொடூர சம்பவம் samugammedia

Chithra / Oct 28th 2023, 1:26 pm
image

Advertisement

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமி தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.


14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல். தமிழர் பகுதியில் கொடூர சம்பவம் samugammedia முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுசம்பவம் தொடர்பில் முள்ளியவளை  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சிறுமி தொடர்ந்து மாவட்ட மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement