150 அடி அகலம் கொண்ட பெரிய விண்கல் பூமியை நெருங்கி வருவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி இந்த விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பாக நாசாவின் கூற்றுப்படி 5 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுவதுடன்,
அதில் இரண்டு கற்கள் பூமிக்கு மிக அருகாமையில் வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக 2023 FZ3 என்ற விண்கல் ஏறத்தாழ 42 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறாக பூமியை நெருங்கி வரும் குறித்த விண்கல்லால் பூமிக்கு எந்த விதமான ஆபத்துமில்லை என்று நாசா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.