இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்தின தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது.
குறித்த ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பொலிசார் தொடர்சியாக கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து தொடர்சியாக ஆலயத்தில் கலந்து கொண்டிருந்த சிவில் சமூகத்தினருடனும் கலந்துரையாடி ஆலய பிரசாதங்களையும் வழங்கி வைத்தனர்.
இதன்பொழுது வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்தின, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன, காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.