• May 09 2024

இலங்கையில் 33பேர் இதுவரை உயிரிழப்பு..! இன்று முதல் விசேட வேலைத்திட்டம்..!samugammedia

Sharmi / Jul 13th 2023, 12:32 pm
image

Advertisement

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து  வருகின்றது.  இந்நிலையில்,  நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகளவானோர் டெங்கு நோயுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இன்று 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக  டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 33பேர் இதுவரை உயிரிழப்பு. இன்று முதல் விசேட வேலைத்திட்டம்.samugammedia இலங்கையில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து  வருகின்றது.  இந்நிலையில்,  நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், 52 ஆயிரத்து 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் 25 ஆயிரத்து 944 இற்கும் அதிகளவானோர் டெங்கு நோயுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.இதேவேளை, இன்று 13 ஆம் திகதி முதல் 61 வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக  டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement