வவனியா குட் ஷெட் வீதியில் உள்ள அம்மா பகவான் லேனில் தம்பதியரும் இரண்டு குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதி நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணம் - காங்கேசன்துறை மாவட்ட முதன்மை காவல்துறை அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இன்றைய தினம் (03.04.2023) அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறியுள்ளதாவது,
இந்த மர்ம மரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டிறியப்படவில்லை.
எனவே இவ்விவகாரத்தில் உங்கள் கவனத்தை ஈர்த்து நீதி நியாயமான தீர்வைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.