எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தினத்தை ஒட்டி ஜனாதிபதி செயலகம்,பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்துள்ள தேசிய சுதந்திர துவிச்சக்கர சவாரி போட்டியானது பருத்தித்துறை முனையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை 31.01.2023 தொடக்கம் 03.02.2023 வரை நான்கு நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் துவிச்சக்கர சவாரியில் அமைச்சுக்களின் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 150 ற்கு மேற்பட்டோர் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.