• May 18 2024

குழந்தை பிரசவித்த 14 வயது சிறுமி..! சம்பவத்தை மறைத்ததாக வைத்தியர் மீது குற்றச்சாட்டு! samugammedia

Chithra / Aug 29th 2023, 3:23 pm
image

Advertisement

சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த  சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைப்பதற்காக  கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயதுடைய  சிறுமி பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பிரசவித்த குழந்தை குறைந்த எடையுடையதாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட  சில சிக்கல்கள் காரணமாக  இந்தச் சிறுமி  அறுவைச் சிகிச்சை நிபுணரால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  இந்தச் சிறுமி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் இது தொடர்பில் வைத்தியசாலை சட்ட மருத்துவப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த வைத்தியர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அவ்வாறான அறிவித்தலை வழங்கக் கூடாது என அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தை பிரசவித்த 14 வயது சிறுமி. சம்பவத்தை மறைத்ததாக வைத்தியர் மீது குற்றச்சாட்டு samugammedia சிறுமி ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்த  சம்பவத்தை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்காமல் மறைப்பதற்காக  கராப்பிட்டிய வைத்தியசாலையின் விசேட சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயதுடைய  சிறுமி பண்டாரகம பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருந்ததால் அவர் பிரசவித்த குழந்தை குறைந்த எடையுடையதாக இருந்ததன் காரணமாக ஏற்பட்ட  சில சிக்கல்கள் காரணமாக  இந்தச் சிறுமி  அறுவைச் சிகிச்சை நிபுணரால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவுக்கு அனுப்பி வைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த  இந்தச் சிறுமி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் இது தொடர்பில் வைத்தியசாலை சட்ட மருத்துவப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர்.இந்நிலையில், குறித்த வைத்தியர், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அவ்வாறான அறிவித்தலை வழங்கக் கூடாது என அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement