• Sep 17 2024

மஸ்கெலியாவில் 18 வயதுடைய இளைஞனுடன் ஏற்பட்ட காதலால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

Tamil nila / Sep 24th 2023, 10:00 pm
image

Advertisement

மஸ்கெலியாவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இருவருக்கும் ஏற்பட்ட காதல் உறவால் அந்த சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரைக்கு இணங்க உதவி அதிகாரி ஜ.பி.நுவான், சார்ஜன் சந்திரசேன மற்றும் பெண் பொலிஸ் பாக்கியா ஆகியோர் இளைஞனையும் மாணவியையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.

இளைஞன் ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   


மஸ்கெலியாவில் 18 வயதுடைய இளைஞனுடன் ஏற்பட்ட காதலால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் மஸ்கெலியாவில் 18 வயதுடைய இளைஞன், 15 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மஸ்கெலியா - சாமிமலை ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இருவருக்கும் ஏற்பட்ட காதல் உறவால் அந்த சிறுமியை இளைஞன் துஷ்பிரயோகம் செய்து உள்ளதாக சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.இதையடுத்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிப்புரைக்கு இணங்க உதவி அதிகாரி ஜ.பி.நுவான், சார்ஜன் சந்திரசேன மற்றும் பெண் பொலிஸ் பாக்கியா ஆகியோர் இளைஞனையும் மாணவியையும் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவியை கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளனர்.இளைஞன் ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement