அரசின் விரோதப் போக்குகள், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினப்பேரணியில் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடககுறிப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியானது மேதின நிகழ்வுகளை வவுனியாவிலும் ஏற்பாடு செய்துள்ளது.
மக்களின் பொருளாதார நெருக்கடி ரணில் ஆட்சியின் ஜனநாயக விரோதப்போக்குகள் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் போன்ற ஆட்சியாளர்களின் செயற்பாட்டை கண்டித்து இம்முறை உழைப்பாளர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் கட்சியின் பிரதான ஊர்வலமானது நாளை காலை 9.30 மணிக்கு வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா மாநகரசபை மண்டபத்தை அடையும். காலை 10.45 மணிக்கு நகரமண்டபத்தில் மேதினக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக மேதினப் பேரணியில் நாளை அணிதிரளுமாறு அழைப்பு. samugammedia அரசின் விரோதப் போக்குகள், பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேதினப்பேரணியில் அணிதிரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.இன்று வெளியிட்டுள்ள ஊடககுறிப்பில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.புதியஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியானது மேதின நிகழ்வுகளை வவுனியாவிலும் ஏற்பாடு செய்துள்ளது. மக்களின் பொருளாதார நெருக்கடி ரணில் ஆட்சியின் ஜனநாயக விரோதப்போக்குகள் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் போன்ற ஆட்சியாளர்களின் செயற்பாட்டை கண்டித்து இம்முறை உழைப்பாளர் தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அந்தவகையில் கட்சியின் பிரதான ஊர்வலமானது நாளை காலை 9.30 மணிக்கு வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா மாநகரசபை மண்டபத்தை அடையும். காலை 10.45 மணிக்கு நகரமண்டபத்தில் மேதினக்கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.