நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் தனது வீட்டில் கோயில் கட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகை பொருத்தவரை நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பது புதிதானதல்ல.
ஏற்கனவே குஷ்பு, நயன்தாரா ஆகியோர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த வகையில் தற்போது ஆந்திராவை சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் தனது வீட்டில் உள்ள ஒரு பகுதியில் சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார்.
இந்த கோவிலில் அவர் சமந்தாவின் சிலையை வைத்துள்ளார் என்பதும் நாளை இந்த கோவில் திறப்பு விழா என்று அறிவித்துள்ளார்.
நடிகை சமந்தா பிரதியுஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் என்றும் அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோவிலை கட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் தான் என்றும் அவரை இதுவரை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தாவின் கோவில் மற்றும் அவருடைய சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர். என்ன காரணம் கூறினார் தெரியுமா samugammedia நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் தனது வீட்டில் கோயில் கட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.தமிழ் திரை உலகை பொருத்தவரை நடிகைகளுக்கு கோவில் கட்டுவது என்பது புதிதானதல்ல. ஏற்கனவே குஷ்பு, நயன்தாரா ஆகியோர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி கொண்டாடியுள்ளனர்.அந்த வகையில் தற்போது ஆந்திராவை சேர்ந்த சந்தீப் என்ற ரசிகர் தனது வீட்டில் உள்ள ஒரு பகுதியில் சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார். இந்த கோவிலில் அவர் சமந்தாவின் சிலையை வைத்துள்ளார் என்பதும் நாளை இந்த கோவில் திறப்பு விழா என்று அறிவித்துள்ளார்.நடிகை சமந்தா பிரதியுஷா என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார் என்றும் அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த கோவிலை கட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் தான் என்றும் அவரை இதுவரை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை சமந்தாவின் கோவில் மற்றும் அவருடைய சிலை குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.