கடந்த நவம்பர் மாதம் பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் பாராளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ(பாராளுமன்ற உறுப்பினர்) கைக்குழந்தையான தனது 1வயது மகனை அழைத்து வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கில்டா ஸ்போர்டெல்லோவின் மகன் திடீரென அழுதுள்ளார்.
உடனே பாராளுமன்றம் அமைதியான நிலையில், குழந்தை அழுவதை நிறுத்தவேவில்லை. குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்து கொண்டே கில்டோ அங்கேயே தனது மகனுக்கு தாய் பால் ஊட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளதுடன் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகின்றது.
இதை சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியேதோடு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.