• May 18 2024

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த சிறுமி - துணை நின்ற வளர்ப்பு தந்தை...!samugammedia

Sharmi / May 11th 2023, 11:08 am
image

Advertisement

தாயின் உதவியுடன் 16 வயது சிறுமி 8 தடவைகள் கர்ப்பமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் இந்திராணி தம்பதியினர் தமது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழக்க இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார்.

தாயான இந்திராணியோ  அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார்.இதனால் அவருக்கு ஒரு கருமுட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், காலங்கள் ஓட சிறுமி 12 வயதை அடைந்த வேளை வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் தமது மகள் என்று கூட கருதாது இந்திராணியும் சையத்தும் இணைந்து  சிறுமியின் கருமுட்டையை விற்று காசாக்கியுள்ளனர்.

இதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை விற்பனை செய்துள்ளனர்.

தமது 16 வயது மகளிற்கு  22 வயது எனவும் பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்றுள்ளனர். இதற்கு  உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயற்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சிறுமி அண்மையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.

அதையடுத்து தாயார் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.

தாயால் 8 முறை கர்ப்பமடைந்த சிறுமி - துணை நின்ற வளர்ப்பு தந்தை.samugammedia தாயின் உதவியுடன் 16 வயது சிறுமி 8 தடவைகள் கர்ப்பமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் இந்திராணி தம்பதியினர் தமது மகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழக்க இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார். தாயான இந்திராணியோ  அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார்.இதனால் அவருக்கு ஒரு கருமுட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், காலங்கள் ஓட சிறுமி 12 வயதை அடைந்த வேளை வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் தமது மகள் என்று கூட கருதாது இந்திராணியும் சையத்தும் இணைந்து  சிறுமியின் கருமுட்டையை விற்று காசாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை விற்பனை செய்துள்ளனர். தமது 16 வயது மகளிற்கு  22 வயது எனவும் பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்றுள்ளனர். இதற்கு  உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயற்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் சிறுமி அண்மையில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். அதையடுத்து தாயார் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ஈரோட்டில் உள்ள மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement