• May 02 2024

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு புதுவரவு - வந்திறங்கிய வண்ணமயமான பறவைகள்..! samugammedia

Chithra / Jul 6th 2023, 11:35 am
image

Advertisement

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும்  இடையிலான விலங்கு, பறவைகள்  பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட   'காசோவரி'  என்ற (Double Wattled Cassowary)  மூன்று பறவைகள் புதன்கிழமை (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த   நிலையில்  தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டன.

இரவு 11.10 மணியளவில் மலேஷியா ஏர்லைன்ஸ்  MH-179  என்ற  விமானம் மூலம் இரண்டு ஆண் காசோவரி பறவைகளும், சுமார் 9 மாதங்களுடைய ஒரு காசோவரி பறவை குஞ்சும் கட்டுநாயக்க  விமான நிலையத்தை வந்தடைந்தன.


சுமார் 5 அடி உயரமும் சுமார் 60 கிலோ கிராம் எடையும் கொண்ட மிகவும் வண்ணமயமான இந்த பறவைகளால் பறக்க முடியாது என்பது  விசேட இம்சமாகும்.

தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் வருகை தந்த காசோவரி பறவைகளை வரவேற்பதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்  தம்மிகா தசநாயக்க உட்பட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.


தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு புதுவரவு - வந்திறங்கிய வண்ணமயமான பறவைகள். samugammedia இலங்கைக்கும் தாய்லாந்துக்கும்  இடையிலான விலங்கு, பறவைகள்  பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்து அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட   'காசோவரி'  என்ற (Double Wattled Cassowary)  மூன்று பறவைகள் புதன்கிழமை (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த   நிலையில்  தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டன.இரவு 11.10 மணியளவில் மலேஷியா ஏர்லைன்ஸ்  MH-179  என்ற  விமானம் மூலம் இரண்டு ஆண் காசோவரி பறவைகளும், சுமார் 9 மாதங்களுடைய ஒரு காசோவரி பறவை குஞ்சும் கட்டுநாயக்க  விமான நிலையத்தை வந்தடைந்தன.சுமார் 5 அடி உயரமும் சுமார் 60 கிலோ கிராம் எடையும் கொண்ட மிகவும் வண்ணமயமான இந்த பறவைகளால் பறக்க முடியாது என்பது  விசேட இம்சமாகும்.தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் வருகை தந்த காசோவரி பறவைகளை வரவேற்பதற்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் கால்நடை வைத்தியர்  தம்மிகா தசநாயக்க உட்பட பலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement