• May 05 2024

கொடூரமாக தாக்கிய தாய்..! 5ம் மாடியில் இருந்து குதித்த சிறுவன்...!samugammedia

Sharmi / Jul 6th 2023, 11:36 am
image

Advertisement

தாயார் அடித்தமையால் அவரிடம் இருந்து தப்பித்து கொள்வதற்கு  சிறுவன் ஒருவன் மாடியில் இருந்து குதித்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அமைந்துள்ள வீட்டினுள் தாய் ஒருவர் தனது 6 வயது மகனை குச்சியால் அடித்துள்ளார்.

இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் குழந்தையை அடிக்க வேண்டாம் என அந்த தாயாரிடம் கெஞ்சியுள்ளதுடன், அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும், தாயாரால் தாக்கப்பட்ட குறித்த சிறுவன், அவர்கள் கதைத்து கொண்டு இருக்கும் போதே குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி மெஷினில் இருந்து கீழே குதித்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி உள்ளத்துடன் பலரது கருத்துக்கும் வழிசமைத்துள்ளது.

இந்த காணொளியானது பொதுமக்களின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் வலுவான குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தேவை என்ற விவாதத்தினையும் தூண்டியுள்ளது.

கொடூரமாக தாக்கிய தாய். 5ம் மாடியில் இருந்து குதித்த சிறுவன்.samugammedia தாயார் அடித்தமையால் அவரிடம் இருந்து தப்பித்து கொள்வதற்கு  சிறுவன் ஒருவன் மாடியில் இருந்து குதித்த துயர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் சீனாவில் அன்ஹுய் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அமைந்துள்ள வீட்டினுள் தாய் ஒருவர் தனது 6 வயது மகனை குச்சியால் அடித்துள்ளார். இந்நிலையில், அக்கம் பக்கத்தினர் குழந்தையை அடிக்க வேண்டாம் என அந்த தாயாரிடம் கெஞ்சியுள்ளதுடன், அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆயினும், தாயாரால் தாக்கப்பட்ட குறித்த சிறுவன், அவர்கள் கதைத்து கொண்டு இருக்கும் போதே குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி மெஷினில் இருந்து கீழே குதித்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி உள்ளத்துடன் பலரது கருத்துக்கும் வழிசமைத்துள்ளது. இந்த காணொளியானது பொதுமக்களின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டில் வலுவான குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தேவை என்ற விவாதத்தினையும் தூண்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement