• May 18 2024

பொலிஸ் மா அதிபர் எடுத்த புதிய தீர்மானம்! samugammedia

Chithra / Nov 26th 2023, 8:58 am
image

Advertisement


பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, நேற்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி, அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கியதுடன், அந்த காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு மேலும் 3 மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீடிப்பு ஒக்டோபர் 13 ஆம் திகதி வழங்கப்பட்டது, சி.டி. விக்கிரமரத்னவுக்கு நான்காவது சேவை நீடிப்பு வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் (24ஆம் திகதி) வரை நடைமுறையில் இருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   


பொலிஸ் மா அதிபர் எடுத்த புதிய தீர்மானம் samugammedia பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, நேற்று (25) முதல் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.நான்காவது முறையாக அவருக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நிறைவடைந்ததை கவனத்தில் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு அடுத்த சில நாட்களில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.சி.டி.விக்கிரமரத்ன கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார்.எவ்வாறாயினும், ஜனாதிபதி, அவருக்கு 3 மாத கால சேவை நீடிப்பு வழங்கியதுடன், அந்த காலம் முடிவடைந்த பின்னர், ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கு மேலும் 3 மாத சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டது.மூன்றாவது முறையாக மேலும் 3 வார சேவை நீடிப்பு ஒக்டோபர் 13 ஆம் திகதி வழங்கப்பட்டது, சி.டி. விக்கிரமரத்னவுக்கு நான்காவது சேவை நீடிப்பு வழங்கப்பட்ட நிலையில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் (24ஆம் திகதி) வரை நடைமுறையில் இருந்தது.இவ்வாறானதொரு பின்னணியில் தான் பதவியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.   

Advertisement

Advertisement

Advertisement