யாழ்ப்பாணத்தை உள்ளடக்கி புதிய முதலீட்டு வலயம் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரையினை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.
அந்தவகையில் ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், திருகோணமலை,பிங்கிரிய மற்றும் கண்டி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.