அக்குரஸ்ஸ - தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் இறுகியமையால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
நேற்றிரவு(15) குறித்த குழந்தை தனது வீட்டில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு வயதும் 15 நாட்களும் நிறைந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அவரது சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.
குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூடி தொண்டையில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக பலி. இலங்கையில் சோகம் samugammedia அக்குரஸ்ஸ - தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் இறுகியமையால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்றிரவு(15) குறித்த குழந்தை தனது வீட்டில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு வயதும் 15 நாட்களும் நிறைந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.அவரது சகோதரர் மூடியை அகற்ற முயன்ற போதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.குழந்தை சிகிச்சைக்காக கம்புருபிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.