திருகோணமலையில் வைத்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணை அவசியம் என பாராளுமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,
சக நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கி சூட்டிற்கு ஆளாகி உயிர் தப்பியுள்ளதோடு, திருகோணமலையில் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நிலையில் இதுதொடர்பாக முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.