மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தகநிலையத்தின் உரிமையாளர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுடுவதற்கு முற்பட்ட போது துப்பாக்கி வேலை செய்யாததால் முயற்சி தோல்வியடைந்திருந்தாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் பதிவாகியுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் ரி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுடுவதற்கு முற்பட்டுள்ளனனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஹரக்கட்டா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நடுன் சிந்தகவை விடுதலை செய்யக் கோரி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நூலிழையில் உயிர் தப்பிய வர்த்தகர் - சந்தேக நபர்கள் ரி56 ரக துப்பாகியுடன் தப்பியோட்டம். samugammedia மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தகநிலையத்தின் உரிமையாளர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுடுவதற்கு முற்பட்ட போது துப்பாக்கி வேலை செய்யாததால் முயற்சி தோல்வியடைந்திருந்தாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் பதிவாகியுள்ளதாக மிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் ரி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி சுடுவதற்கு முற்பட்டுள்ளனனர்.பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை ஹரக்கட்டா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நடுன் சிந்தகவை விடுதலை செய்யக் கோரி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.