இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளை, உள்ளுர் சந்தையில் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு இந்திய முட்டைகள் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பேக்கரிகளுக்கு வழங்கப்படுகின்ற முட்டைகள் உடனடியாக இடைநிறுத்தப்படுமென அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேக்கரி உரிமையாளர், ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி முட்டையை அவரது சகோதரரின் வர்த்தக நிலையத்தில், விற்பனைக்கு வழங்கியதன் காரணமாக, அந்த பேக்கரி உரிமையாளருக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் ஆசிரி வாலிசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான மற்றொரு காரணம், உள்ளூர் முட்டைகளின் விலையை குறைப்பதாக என தெரிவித்த ஆசிரி வாலிசுந்தர, உள்ளூர் முட்டைகளின் தட்டுப்பாடு நீங்கி விலை சீராகும் வரை இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரி உரிமையாளர்களுக்கு அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை. samugammedia இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டைகளை, உள்ளுர் சந்தையில் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.எனினும் இவ்வாறு இந்திய முட்டைகள் உள்ளுர் சந்தையில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் பேக்கரிகளுக்கு வழங்கப்படுகின்ற முட்டைகள் உடனடியாக இடைநிறுத்தப்படுமென அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பேக்கரி உரிமையாளர், ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி முட்டையை அவரது சகோதரரின் வர்த்தக நிலையத்தில், விற்பனைக்கு வழங்கியதன் காரணமாக, அந்த பேக்கரி உரிமையாளருக்கு முட்டை வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் ஆசிரி வாலிசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான மற்றொரு காரணம், உள்ளூர் முட்டைகளின் விலையை குறைப்பதாக என தெரிவித்த ஆசிரி வாலிசுந்தர, உள்ளூர் முட்டைகளின் தட்டுப்பாடு நீங்கி விலை சீராகும் வரை இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.