• May 08 2024

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல் samugammedia

Chithra / Aug 30th 2023, 6:54 am
image

Advertisement

கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு வேலை பணிப்பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த திருடிச் சென்றுள்ளார்.

பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்து சந்தேக நபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டனர்.

எனினும் அதற்குள் 5 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை குறித்த பெண் அடகு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல் samugammedia கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு வேலை பணிப்பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த திருடிச் சென்றுள்ளார்.பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்து சந்தேக நபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டனர்.எனினும் அதற்குள் 5 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை குறித்த பெண் அடகு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement