காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் தனியார் பேருந்தொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று அதிகாலை சுமார் 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதிக்கருகில் உள்ள வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தொன்றே முற்றாக தீ பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
இத் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.