தம்பி இறந்த சோகத்தில் அக்காவும் தம்பியின் மார்பில் சாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் கன்னியாகுமாரியில் தக்களை அருகேவுள்ள காந்தி நகர் பகுதியில் இடம்பெறுள்ளது.
அப்பகுதியில் பள்ளி ஒன்றில் ஆசிரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் இருந்த வேணுகோபால் என்பவர் இதயநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதய நோய் காரணமாக வேணுகோபால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்துள்ளார்.
இதனை அவரது தமக்கை அவரை காண்பதற்காக பதறியடித்து வந்த நிலையில் அங்கு தம்பி உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
திடீரென தமக்கையார் இறந்த தம்பியின் மார்பில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கியுள்ளனர்.
அப்பொழுது தமக்கையாரும் மார்பில் சாய்ந்தபட உயிரிழந்தமை தெரியவந்ததுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.