• May 02 2024

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ஜனனி!

Sharmi / Dec 21st 2022, 8:42 pm
image

Advertisement

தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்6 தற்போது எழுபத்தி இரண்டு நாட்களை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.


இந்நிலையில்  ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து பிக்பாஸில் கலந்து கொண்டவர் தான் ஜனனி. இவர் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். இவர் ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்து வந்தார்.பின்னர் ரசிகர்களால் கவரப்பட்டார். இருப்பினும் அமுதவாணனுடன் இவர் காட்டிய நெருக்கம் தான் ரசிகர்களை சலிப்படையச் செய்தது.


இவ்வாறான நிலையில் இவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் முதன் முதலில் ரசிகர்களுடள் சமூகவலைத்தளத்தில் நேரடியாக  உரையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.


அதில் அவர் தெரிவித்ததாவது,

யார் உங்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர் என்று கேட்டதும் எல்லோரையும் எனக்கு பிடிக்கும் எனக் கூறி இருந்தார். இந்த நேரம் யாரை  பிடிக்காது எனக் கூறியதும் அப்பிடி யாரையும் பிடிக்காது என்று இல்லை சில வேளை டாஸ்கில் மட்டும் தான் அவங்களை பிடிக்காது என்று கூறினார்.

இவ்வாறு கேட்டுக்கொண்டு இருக்கும் போது வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரையும்  ஒவ்வொரு மிருகங்களாக ஒவ்வொன்றாக ஒப்பிட்டுக் கூறுங்கள் எனக் கேட்கும் போது பாம்பு...ஷிவின், கழுகு...அசீம் ,முதலை...ஷிவின்,மான்...ரச்சிதா என ஒப்பிட்டு கூறுகின்றார்.



இவ்வாறுஇருக்கையில் இலங்கை ரசிகர் ஒருவர்  எப்படி இருக்கிறீங்க எண்டு கேட்டதற்கு கேட்டதற்கு ஜனனி அவரின் குடும்பம் நல்லா இருக்கனும் சந்தோசமாக இருங்க எனக் கூறுகின்றார்.அத்தோடு குலுவாலி எனும் பாடலை பாடுங்கள் என அவர் தன்னுடைய ஆசையைக்  கூறியதும் உடனே தனது கியுட் ஆக்சனுடன் பாடிக் காட்டினார்.

எனக்கு ரொம்ப லவ் தந்து இருக்கிறீங்க..நான் வெளியில் வரும் போது பயந்து கொண்டு வந்து இருந்தேன்..நீங்க இப்படி லவ் தருவீங்க என்று நான் எதிர்பார்க்கலை ..யாராக இருந்தாலும் சந்தோசமாக இருக்கனும் என்று கூறியிருந்தார்.எல்லோருக்கும் நன்றி என கூறி இருந்தார்.  

இந்நிலையில் ஜனனியின் லைவ் இனை பார்வையிட்ட அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ஜனனி தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்6 தற்போது எழுபத்தி இரண்டு நாட்களை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.இந்நிலையில்  ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து பிக்பாஸில் கலந்து கொண்டவர் தான் ஜனனி. இவர் கடந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். இவர் ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்து வந்தார்.பின்னர் ரசிகர்களால் கவரப்பட்டார். இருப்பினும் அமுதவாணனுடன் இவர் காட்டிய நெருக்கம் தான் ரசிகர்களை சலிப்படையச் செய்தது.இவ்வாறான நிலையில் இவர் வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் முதன் முதலில் ரசிகர்களுடள் சமூகவலைத்தளத்தில் நேரடியாக  உரையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அதில் அவர் தெரிவித்ததாவது,யார் உங்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டியாளர் என்று கேட்டதும் எல்லோரையும் எனக்கு பிடிக்கும் எனக் கூறி இருந்தார். இந்த நேரம் யாரை  பிடிக்காது எனக் கூறியதும் அப்பிடி யாரையும் பிடிக்காது என்று இல்லை சில வேளை டாஸ்கில் மட்டும் தான் அவங்களை பிடிக்காது என்று கூறினார்.இவ்வாறு கேட்டுக்கொண்டு இருக்கும் போது வீட்டில் உள்ள ஒவ்வொருத்தரையும்  ஒவ்வொரு மிருகங்களாக ஒவ்வொன்றாக ஒப்பிட்டுக் கூறுங்கள் எனக் கேட்கும் போது பாம்பு.ஷிவின், கழுகு.அசீம் ,முதலை.ஷிவின்,மான்.ரச்சிதா என ஒப்பிட்டு கூறுகின்றார்.இவ்வாறுஇருக்கையில் இலங்கை ரசிகர் ஒருவர்  எப்படி இருக்கிறீங்க எண்டு கேட்டதற்கு கேட்டதற்கு ஜனனி அவரின் குடும்பம் நல்லா இருக்கனும் சந்தோசமாக இருங்க எனக் கூறுகின்றார்.அத்தோடு குலுவாலி எனும் பாடலை பாடுங்கள் என அவர் தன்னுடைய ஆசையைக்  கூறியதும் உடனே தனது கியுட் ஆக்சனுடன் பாடிக் காட்டினார்.எனக்கு ரொம்ப லவ் தந்து இருக்கிறீங்க.நான் வெளியில் வரும் போது பயந்து கொண்டு வந்து இருந்தேன்.நீங்க இப்படி லவ் தருவீங்க என்று நான் எதிர்பார்க்கலை .யாராக இருந்தாலும் சந்தோசமாக இருக்கனும் என்று கூறியிருந்தார்.எல்லோருக்கும் நன்றி என கூறி இருந்தார்.  இந்நிலையில் ஜனனியின் லைவ் இனை பார்வையிட்ட அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement