அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் 1930ஆவது நாளாக தொடர்போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம்(30) கையில் தீபங்களுடனும், பதாகைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கண்ணீருக்கு தடைவிதிப்போரிடம் நல்லிணக்கத்தை எதிர்பார்க்கலாமா, எங்கள் குறுதியை உறிஞ்சினாய் எதுவரை எங்கள் கண்ணீரை உறிஞ்சுவாய் போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.