• Apr 30 2024

ஓராண்டாக தொடரும் பகை...!யாழில் முகமூடி அணிந்து பழி தீர்த்த கும்பல்...!samugammedia

Sharmi / Jul 11th 2023, 9:59 am
image

Advertisement

முகமூடி அணிந்த மூவரடங்கிய கும்பல் ஒன்று சகோதரர் மூவரை வாளினால் வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம், காரைநகரின் வலந்தலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

வலந்தலை சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியருக்கு, வெளிப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கும் இடையே கடந்த வருடம் எரிபொருள் நெருக்கடியான காலப்பகுதியில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞனும், ஊழியரும் நேற்று முன்தினம் மாலை காரைநகர் பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஊழியர் கடமையில் இருந்த வேளை, மோட்டார் சைக்கிளின் இலக்க தகட்டையும், முகத்தையும் மறைத்து வந்த வன்முறைக்  குழு ஊழியர் மீது வாளால் தாக்கியுள்ளது.

அத்துடன், தாக்குதலை தடுக்க முயன்ற ஊழியரின் இரு சகோதரர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

28 வயதான ஊழியரின் மூத்த சகோதரர் யாழ் போதனா வைத்தியசாலையில், 25 வயதான அந்த ஊழியரும் அவரது 22 வயதான இளைய சகோதரரும் காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக, ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓராண்டாக தொடரும் பகை.யாழில் முகமூடி அணிந்து பழி தீர்த்த கும்பல்.samugammedia முகமூடி அணிந்த மூவரடங்கிய கும்பல் ஒன்று சகோதரர் மூவரை வாளினால் வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம், காரைநகரின் வலந்தலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. வலந்தலை சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையாற்றும் ஊழியருக்கு, வெளிப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கும் இடையே கடந்த வருடம் எரிபொருள் நெருக்கடியான காலப்பகுதியில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இளைஞனும், ஊழியரும் நேற்று முன்தினம் மாலை காரைநகர் பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஊழியர் கடமையில் இருந்த வேளை, மோட்டார் சைக்கிளின் இலக்க தகட்டையும், முகத்தையும் மறைத்து வந்த வன்முறைக்  குழு ஊழியர் மீது வாளால் தாக்கியுள்ளது. அத்துடன், தாக்குதலை தடுக்க முயன்ற ஊழியரின் இரு சகோதரர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். 28 வயதான ஊழியரின் மூத்த சகோதரர் யாழ் போதனா வைத்தியசாலையில், 25 வயதான அந்த ஊழியரும் அவரது 22 வயதான இளைய சகோதரரும் காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக, ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement