முன்னிலை சோஷலிச கட்சியின் செயற்பாட்டாளர்களால் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு, மருதானை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிலைய கட்டளைத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நீதிமன்ற பகுதி, தேசிய வைத்தியசாலை சதுக்கம், டீன்ஸ் வீதி, டி.பி.ஜெயா மாவத்தை மற்றும் அதனை அண்மித்துள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பொதுப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை அண்மித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.