இந்தியாவின் பெங்களூருவில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை இந்திய மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூர், டோம்லூர் பகுதியில் வசிக்கும் குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து ஓமானுக்கு தப்பிச் சென்றுள்ள ஜலால் என்ற சந்தேகநபருக்கு குமார் என்ற சந்தேகநபர் உதவிகளை வழங்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும் அவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் தலைமறைவாகியுள்ளதாக இந்திய மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது samugammedia இந்தியாவின் பெங்களூருவில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரை இந்திய மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.பெங்களூர், டோம்லூர் பகுதியில் வசிக்கும் குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.பெங்களூரில் இருந்து ஓமானுக்கு தப்பிச் சென்றுள்ள ஜலால் என்ற சந்தேகநபருக்கு குமார் என்ற சந்தேகநபர் உதவிகளை வழங்கியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த இருவரும் நெருங்கிய நண்பர்கள் எனவும் அவர்களுடன் தொடர்பை பேணிய மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் தலைமறைவாகியுள்ளதாக இந்திய மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.