வவுனியா தெற்குதமிழ் பிரதேசசபையில் தமிழீ்ழ விடுதலை இயக்கம் சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற து.நடராஜசிங்கம் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது இடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளராக பொறுப்புவகித்த விஜயகுமார் புரூஸ் அவர்கள் குறித்த வெற்றிடத்திற்கு கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் முன்பு நேற்றையதினம் அவர் அதற்கான உறுதியுரையினை செய்து கொண்டார்.