நெடுந்தீவில் இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நேர்மையான விசாரணை நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவு இறங்குதுறையில் ஒன்றுகூடிய மக்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யுமாறு கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டிருந்தனர்.
விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நொடுந்தீவிற்கு பயணித்திருந்த நிலையில் இவ்வாறு மக்கள் ஒன்றுகூடி வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன் நெடுந்தீவின் பாதுகாப்பு எங்கே ..?? கொலைகாரனை உடனடியாக கைது செய் போன்ற பாதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.