நெடுந்தீவில் கொலை செய்யப்பட்ட சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
பிற்பகல் 2.30 மணியளவில் ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன் உள்ளிட்ட விசேட பொலிஸ் படை மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் நெடுந்தீவுக்குப் பயணம் செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த குழுவினர் சடலங்களை மீட்கும் பணியினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த 5 பேரின் சடலங்களும் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படுவதுடன் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.