இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஸகார்யன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்றது.
மரியாதை நிமித்தம் ஆளுநர் அலுவலகத்துக்கு விஜயம் செய்த தூதுவர், கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடினார்.
இதன்போது கிழக்கு மாகாணத்துக்கான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக ஆளுநரிடம் ரஷ்ய தூதுவர் உறுதியளித்துள்ளார்.