கம்பஹா வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள காவல் துறைப்பிரிவில் மது போதையில் கடமையில் ஈடுபட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமையவே குறித்த காவல் துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர் தொடர்பில் கம்பஹா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.