இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாட்கள் பயணமாக இலங்கைக்கு வருகைதந்துள்ள நிலையில் இன்றையதினம்(02) திருகோணமலையில் State bank of india புதிய கிளையினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து திறந்து வைத்தார்.
அதேவேளை வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமனால் செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறிய 200ஆவது ஆண்டு நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளதுடன் அதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.