இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட கடற்தொழில் சார் தொழில்களை முப்படையினரும் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும். இதேவேளை எமது கடற்தொழில் சார் மக்களும் சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடாது எதிர்கால சந்ததியினரின் உணவுத் தேவைக்கேற்றாற்போல் கடலை உபயோகிக்க வேண்டும் என வடமாகாண கடற்தொழிலாளர் இணையங்களின் தலைவர் பாலசுரேஸ் தெரிவித்தார்.
யாழில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
கடற்தொழில் நடவடிக்கை சார் எந்த நடவடிக் கைகளை மேற்கொள்வதாயினும் சரி கடன்களைப் பெறுவதாயினும் சரி அரசாங்கம் கடற்தொழிலாளர்களின் அனுமதியைப் பெற்ற பின்னே செயற்பட வேண்டும் என்றார்