நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சிறந்த தலைவர்களில் பஸில் ராஜபக்சவும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்ததுடன் பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில் ராஜபக்சவா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சிறந்த தலைவர்கள் உள்ளனர்.
நீங்கள் பஸில் ராஜபக்ச தொடர்பாக கேட்கின்றீர்கள் எனில், நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்ககூடிய சிறந்த மற்றும் பொறுத்தமான தலைவர் அவர்.
போர் காலத்தில் சர்வதேச ஆதரவை பெற்று தந்தவர். போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தவர்.
இவ்வாறு தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த காலங்களில் அவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவை போலியானவை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படியான தகுதியான தலைவர்கள் எமது கட்சி வசம் உள்ளனர்
நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சிறந்த தலைவர் பசில். மீண்டும் முருங்கை மரமேறும் மொட்டு samugammedia நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சிறந்த தலைவர்களில் பஸில் ராஜபக்சவும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்ததுடன் பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில் ராஜபக்சவா என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் சிறந்த தலைவர்கள் உள்ளனர். நீங்கள் பஸில் ராஜபக்ச தொடர்பாக கேட்கின்றீர்கள் எனில், நாட்டுக்கு தலைமைத்துவம் வழங்ககூடிய சிறந்த மற்றும் பொறுத்தமான தலைவர் அவர்.போர் காலத்தில் சர்வதேச ஆதரவை பெற்று தந்தவர். போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தவர். இவ்வாறு தனது திறமையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த காலங்களில் அவருக்கு எதிராக போலி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை போலியானவை என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இப்படியான தகுதியான தலைவர்கள் எமது கட்சி வசம் உள்ளனர்