• Apr 20 2024

தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு!! - யாழில் பரபரப்பு SamugamMedia

Chithra / Mar 16th 2023, 6:41 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 5 நாட்களாக காணமல்போய் தேடப்பட்டு வந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவரின் வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடல் பழுதடைந்து, துர்நாற்றம் வீசப்படும் நிலையில் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் இன்னும் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தூக்கில் தொங்கிய நிலையில் வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு - யாழில் பரபரப்பு SamugamMedia யாழ்ப்பாணம் - நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயது மதிக்கத்தக்க காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த நபர் கடந்த 5 நாட்களாக காணமல்போய் தேடப்பட்டு வந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.அவரின் வீட்டிற்கு பின் பகுதியில் உள்ள கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உடல் பழுதடைந்து, துர்நாற்றம் வீசப்படும் நிலையில் சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு பொலிஸார் இன்னும் வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement