பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணொருவர் கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய சாந்தி அலெக்ஸாண்ட்ரா ஜயசிங்க என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் மருமகள் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவருகின்றது.
அவர் தனது பணிப்பெண்ணுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைணகளைள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.