• May 18 2024

நுரைச்சோலை கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை! samugammedia

Tamil nila / Aug 26th 2023, 8:41 pm
image

Advertisement

நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவ்ற்குற்பட்ட சேத்தாப்பொலை கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.


மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் சென்றவர்கள் இவ்வாறு சடல்மொன்று காணப்பட்டதை அவதானித்த நிலையில் நுரைச்சோலைப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதோடு தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



இதன் போது சடலம் காணப்பட்ட 50 மீற்றர் தொலைவில் இரத்தக்கரைகள் காணப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இது கொலையாக இருக்கலாமென்று தடவியல் பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். 

நுரைச்சோலை கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை samugammedia நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நுரைச்சோலைப் பொலிஸ் பிரிவ்ற்குற்பட்ட சேத்தாப்பொலை கடற்கரைப் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.மீன்பிடிப்பதற்கு கடலுக்குச் சென்றவர்கள் இவ்வாறு சடல்மொன்று காணப்பட்டதை அவதானித்த நிலையில் நுரைச்சோலைப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸார் வருகைத் தந்து சடலத்தைப் பார்வையிட்டதோடு தடவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.இதன் போது சடலம் காணப்பட்ட 50 மீற்றர் தொலைவில் இரத்தக்கரைகள் காணப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இது கொலையாக இருக்கலாமென்று தடவியல் பொலிஸார் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement