• Oct 05 2024

தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு நாள் குறித்த பஸில்!SamugamMedia

Sharmi / Feb 17th 2023, 10:22 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரம், கட்சி மீள்மறுசீரமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நிலையான அமைச்சரவையை அமைத்தல். பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறும் பஸில் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு நாள் குறித்த பஸில்SamugamMedia உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும். பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நெலும் மாவத்தையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.இதன்போது தற்போதைய அரசியல் நிலைவரம், கட்சி மீள்மறுசீரமைப்புத் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. நிலையான அமைச்சரவையை அமைத்தல். பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தயாராகுமாறும் பஸில் ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement