பதின்மூன்று ஆண்டுகளிற்கு முன்னர் கொரல் அமாயி என்பவர் அவரது திருமணப் படங்களுடன் காணொளிகள் அடங்கிய புகைப்படக் கருவியை அனிமாஸ் ஆற்றில் தொலைத்துள்ளார்.
இச் சம்பவம் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அனிமாஸ் ஆற்றின் அருகில் குப்பைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த ஸ்பென்ஸர் கிரேனர் என்பவர் 13 ஆண்டுகளிற்கு முன்னர் அமாயி தொலைத்த காமராவினை கண்டுபிடித்துள்ளார்.
அதிலிருந்த படங்களுக்கும் காணொளிகளுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உணர்ந்த ஸ்பென்ஸர் கிரேனர் தனது முகப்புத்தகத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவிற்கு ஒரு மணிநேரத்தில் கொரல் அமாயின் கணவர் பதிலளித்ததுடன், சில நாட்களிற்கு பிறகு கிரேனரும் அமாயியும் சந்தித்துள்ளனர்.
கிரேனர் அந்தப் புகைப்படக் கருவியை அமாயிவிடம் ஒப்படைக்க தொலைந்துபோன புகைப்படக் கருவி 13 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் கிடைத்ததில் பேரின்பம் அமாயி கிரேனரு நன்றி வெளியிட்டுள்ளார்