எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரின், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின்போது, பிரதிவாதிகள் விடுத்த கோரிக்கைக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதன்படி, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தங்கள் ஆட்சேபனைகளை முன்வைக்கவிருந்தனர்.
இருப்பினும், அவர்களின் சட்டத்தரணிகள், தங்கள் ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான திகதியை நிர்ணயிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர்.
இந்த கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் தங்கள் ஆட்சேபனைகளை மே 22 ஆம் திகதி தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.