• Sep 22 2024

நிதி வழங்க முடியுமா, முடியாதா? – நிதி அமைச்சிடம் கேள்வியெழுப்பிய தேர்தல் ஆணைக்குழு!

Chithra / Jan 24th 2023, 9:32 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொகை நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பதை தெரியப்படுத்துமாறு உரிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, வர்த்தமானி மூலம் அறிவிப்பதே சட்டம் எனவும் மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.


நிதி வழங்க முடியுமா, முடியாதா – நிதி அமைச்சிடம் கேள்வியெழுப்பிய தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.குறித்த தொகை நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பதை தெரியப்படுத்துமாறு உரிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இதேவேளை, நெருக்கமான சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் எந்தவொரு தீர்மானமும் செல்லுபடியாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள போதிலும், தேர்தல் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் திகதியை ஊடகங்களுக்கு அறிவிப்பது அல்ல, வர்த்தமானி மூலம் அறிவிப்பதே சட்டம் எனவும் மஹாநாம ஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement