இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு தரப்பினரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் வாழமுடியாதென இரண்டு முதியவர்கள் இன்று தனுஸ்கோடி கரையில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்கரையை இன்று சென்றடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் காவல் நிலைய பொலிசார் அவர்களை இராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.