திருகோணமலை மூதூர் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர்களின் நடைபவனி இன்று(21)காலை இடம்பெற்றது.
மூதூர் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த இவ்விழிப்புணர்வு நடைபவனியில் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
நடைபவனியில் கலந்து கொண்ட பழைய மாணவர்கள் பாடசாலை கொடிகளையும், ஒரே வகையான மேலங்கிகளையும் அணிந்து ,நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி நடைபயணத்தை மேற்கொண்டதையும் காண முடிந்தது.