கிளிநொச்சி மாவட்டத்தில் 'வருமுன் காப்போம்' எனும் தொனிப்பொருளில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று(18) முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்கள், வர்த்த சங்கம், பொது மக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவு அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரில் A9 வீதியின் இருமருங்கும் உள்ள இடங்களை சிரமதான பணிகள் கரடிப்போக்கு சந்தி முதல் வைத்தியசாலை வரை சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.